Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் இருந்து ஸ்ரீரங்கம் ... அப்பம் விற்பனையில் தொடரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் கூடுதலாக 32 இடங்களில் கண்காணிப்பு கேமரா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2013
10:12

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பாதுகாப்புக்காக, கூடுதலாக 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு, அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருவதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ராஜகோபுரத்தில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஆண்டாள் கோயில் நுழைவு வாயில், கொடி மரம், வடபத்ரசாயி கோயில் நுழைவு வாயில், ராஜகோபுரம் உட்பட எட்டு இடங்களில் மட்டும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை கோயில் செயல் அலுவலரின் கண்காணிப்பில் இருந்து வந்தது. இந்நிலையில், அறநிலையத்துறை ஆணையாளர் தனபால், கடந்த சில மாதங்களுக்கு முன், கோயிலை ஆய்வு செய்து, கூடுதல் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவிட்டார். கடந்த சில நாட்களாக, ராஜகோபுரம் நுழைவு வாயில், ஆடிப்பூர மண்டபம், நந்தவனம், ஆண்டாள் கோயில் சன்னதி கடை வீதி, ஆண்டாள் கோயில் நுழைவு வாயில், கொடிமரம், சுற்று பிரகாரங்கள், கண்ணாடி மாளிகை முன்புறம், வெள்ளிக்கிழமை குறடு, சக்கரத்தாழ்வார் சன்னதி, வடபத்ரசாயி படிக்கட்டுகள், பகல் பத்து மண்டபம் உட்பட கூடுதலாக, 32 இடங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி நடக்கிறது. மேலும், "டிவிக்கள் தக்கார் அறை, செயல் அலுவலர் அறை, போலீஸ் புறக்காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அதிகாரிகளும், போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். தக்கார் ரவிச்சந்திரன் கூறுகையில்,""ஆண்டாள் கோயில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக, மொத்தம் 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. மேலும் இக்கேமராக்கள் எதிர் எதிரே வைத்துள்ளதால் கோயிலுக்குள் வருபவர்களின் முகம் தெளிவாக தெரியும். இதன் மூலம் கோயிலின் அனைத்து பகுதிகளும் போலீசாரின் கண்காணிப்பிற்குள் வந்து விடும், என்றார்.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாடிப்பட்டி: பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனின் ... மேலும்
 
temple news
விஜயநகரா: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதன் முறையாக, ஹம்பிக்கு வந்தார். வரலாற்று பிரசித்தி ... மேலும்
 
temple news
டில்லி; இந்தியா வந்துள்ள மங்கோலியாவின் ஜனாதிபதி குரேல்சுக் உக்னா தனது குடும்பத்தினறுடன் டில்லி ... மேலும்
 
temple news
அன்னுார்: அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் 2 கோடி ரூபாயில் தங்க தேர் அமைக்கும் பணி நடைபெற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில், உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை வாயிலாக 53 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar