Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் கருட சேவை! மருந்தீசுவரர் கோவிலில் திருவாதிரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புத்துணர்வு முகாம்களுக்கு வராத கோவில் யானைகளுக்கு புது ஏற்பாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2013
11:12

மேட்டுப்பாளையம், புத்துணர்வு முகாமில் கலந்து கொள்ள முடியாத யானைகளுக்கு, முகாமில் கொடுக்கப்படுவது போலவே, உணவு, மருந்துகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகையில், கோவில் மற்றும் மடங்களில் வளர்க்கப்படும் யானைகளுக்கான புத்துணர்வு முகாம், அறநிலையத் துறை சார்பில் நடத்தப்படுகிறது.

நாளை துவக்கம்: இந்த முகாம், நாளை, 19ம் தேதி துவங்கி, பிப்., 4ம் தேதி வரை நடக்கிறது. இந்த முகாமில் கலந்து கொள்ள, தமிழக கோவில்கள், மடங்களில் வளர்க்கப்படும் யானைகளை கொண்டு வரும் பணி நடந்து வருகிறது. கடந்த முறை நடத்தப்பட்ட முகாமுக்கு, அனைத்து கோவில், மடங்களில் வளர்க்கப்படும் யானைகளும் கொண்டு வரப்பட்டன. இந்த ஆண்டில், லாரியில் ஏற தயங்கும், ஏற முடியாத யானைகளை அழைத்து வர வேண்டாம் என, அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர். இதில், சேலம் சுகவ னேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரி காலில் ஏற்பட்ட புண்ணால், கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக உடல் நலம் குன்றி விட்டது. இதனால், புத்துணர்வு முகாம்களில் ராஜேஸ்வரி கலந்து கொள்ளவில்லை. இதே நிலை தான், இப்போதும் தொடர்கிறது. இதேபோல், மேலும், மூன்று யானைகள் புத்துணர்வு முகாமில் கலந்து கொள்ளாது எனத் தெரிகிறது.

புத்துணர்வு முகாமில் கலந்து கொள்ளாத யானைகளுக்கு, முகாமில் கலந்து கொள்ளும் யானைகளுக்கு வழங்கப்படுவது போல், சத்தான உணவு, மருந்து பொருட்களை, அவற்றின் வசிப்பிடங்களிலே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: புத்துணர்வு முகாமில், கலந்து கொள்ள முடியாத யானைகளுக்கு, முகாமில் பிற யானைகளுக்கு வழங்கப்படும் அனைத்து பொருட்களையும் இங்கு வழங்க உள்ளோம். கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கம் இருந்து வருவதால், யானைகளுக்கு, அந்த நோய் பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது, இவ்வாறு, அவர் கூறினார். - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழையினால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; கொள்ளிடம் அருகே மேலவல்லம் கிராமத்தில் பிரத்யங்கிரா தேவி கோயில் உள்ளது. இக்கோயிலில் ... மேலும்
 
temple news
பல்லடம்; கடவுளிடம் நம்மை முழுமையாக ஒப்படைத்து விட வேண்டும் என, பல்லடம்‌, சித்தம்பலத்தில் நடந்த அமாவாசை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar