Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கத்தில் நான்கு பக்தர்கள் ... திருப்பரங்குன்றம் தேர்கள் புதுப்பிப்பு திருப்பரங்குன்றம் தேர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் நீராட தூய்மையாக இல்லை: வக்கீல்கள் குழு அறிக்கை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 டிச
2013
10:12

ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்தப் பகுதி, புனித நீராட தகுதியான, தூய்மையான இடமாக இல்லை. கால்களைக்கூட நனைக்க முடியாது. மாசடைந்துள்ளது, என, வக்கீல் கமிஷனர்கள், மதுரை ஐகோர்ட் கிளையில் அறிக்கை தாக்கல் செய்தனர். கோவை வக்கீல் வெண்ணிலா தாக்கல் செய்த பொது நல மனு: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலைச் சுற்றி கழிவுகள்  தேங்கியுள்ளன. கழிவுகள் அக்னி தீர்த்தப் பகுதியில் கலக்கிறது. 22 இடங்களில் தீர்த்தமாட, புரோக்கர்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். அக்னி தீர்த்தத்தை சுத்தப்படுத்த வேண்டும். கோயில் புனிதத்  தன்மையை காக்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். ஏற்கனவே நீதிபதிகள்,"கோயில் மற்றும் அக்னி தீர்த்தப் பகுதியை வக்கீல்கள் கமிஷனர்கள் எஸ்.எஸ்.சுந்தர், என்.கிருஷ்ணவேணி, எஸ்.சீனிவாசராகவன் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என்றனர். நீதிபதிகள் ஆர்.சுதாகர், எஸ்.வைத்தியநாதன் பெஞ்ச் முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார் ஆஜரானார்.வக்கீல் கமிஷனர்கள் தாக்கல் செய்த அறிக்கை: அக்னி தீர்த்தப் பகுதியில் தேங்கிய நீர், பழுப்பு நிறமாக, துர்நாற்றம் வீசுகிறது. பழைய துணிகள் தேங்கியுள்ளன. பக்தர்கள்,"சரியாக புனித நீராட முடியவில்லை என்றனர். விடுதிகள், ஓட்டல்கள், கடைகளின் கழிவுநீர் கலப்பதாக மக்கள் கூறினர். மொத்தத்தில், புனித நீராட தகுதியான, தூய்மையான இடமாக இல்லை; கால்களைக்கூட நனைக்க முடியாது. இடையூறாக தெருநாய்கள், மாடுகள் திரிகின்றன. பிச்சைக்காரர்கள் தொல்லை அதிகம்.  கழிவுகளை சுத்திகரித்து, கடலில் விடுவதாக ராமேஸ்வரம் நகராட்சி கமிஷனர் தெரிவித்தார். அப்பணி பெயரளவில் நடக்கிறது. சுத்திகரிக்கப்படும் கழிவுநீரை, தொலைதூர பகுதிக்கு கடத்தி, கடலில் விடலாம். கோயிலுக்குள் தீர்த்தமாடும் பகுதியிலும் தண்ணீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது, என குறிப்பிட்டிருந்தனர். விசாரணையை ஜன.,3 க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடிமாதம் அம்மனுக்குத்தான் உரியது என்றாலும் ஆடிக் கிருத்திகை தினம் முருகனுக்கு உரியதாகச் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி கோவிலில் மாதம் தோறும் நடைபெறும் மகா ருத்ர யக்ஞம் நடந்தது. இதை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் திருவாடிப்பூர உத்ஸவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் ஆடி முதல் சனியை முன்னிட்டு இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar