Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தூய பேதுரூ ஆலயத்தில் கிறிஸ்துமஸ் ... வல்லப கணபதி கோவிலில் ராதா மாதவ சீதா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
65 அடி உயர ஏசுகிறிஸ்து சிலை கோலாகல திறப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2013
11:12

வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த புத்திரகவுண்டன்பாளையம் புனித, 13ம் சிங்கராயர் கிறிஸ்துவ ஆலயம் மற்றும், 65 அடி உயர ஏசுகிறிஸ்து திருவுருவச்சிலை திறப்பு விழா, வெகு விமரிசையாக நடந்தது. வாழப்பாடி அடுத்த புத்திரகவுண்டன்பாளையத்தில், 30 லட்சம் ரூபாய் செலவில், பழமையான புனித சிங்கராயர் தேவாலயம் மற்றும் செபஸ்தியார் திருத்தலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அக்கோவில் முகப்பில், வாழப்பாடி ரியல் எஸ்டேட் அதிபரும், முன்னாள் கவுன்சிலருமான லாசர் குடும்பத்தாரின் சார்பில், 20 லட்சம் ரூபாய் செலவில், 65 அடி உயரத்தில், ஏசுகிறிஸ்து திருவுருவ, "ஃபைபர் சிலை தத்ரூபமாக நிறுவப்பட்டது. அதன் திறப்பு விழா, நேற்று முன்தினம் காலை வெகுவிமரிசையாக நடந்தது. வாழப்பாடி லாசர் வரவேற்றார். சேலம் மறை மாவட்ட பேராயர் சிங்கராயன் தலைமையில், மாவட்ட முதன்மை குரு பிலவேந்திரன், வாழப்பாடி பங்குதந்தை குருசடிசகாயராஜ் மற்றும் மத குருக்கள் சிறப்பு திருப்பலி அர்ச்சிப்பு பூஜை நடத்தி, தேவாலயம் மற்றும் ஏசுகிறிஸ்து திருவுருவத்தை திறந்து வைத்தனர். அந்த சிறப்பு திருப்பலி பூஜை வழிபாட்டில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு, சேலம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்வராஜ், மாநகர் மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் வைத்திலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது. திருத்தணி முருகன் ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் அன்னை ஆதிபராசக்திக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar