Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் பகல்பத்து ... ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி துவக்கம்! ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புத்தாண்டு தரிசனம்: திருமலையில் குறைந்த பக்தர்கள் கூட்டம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 ஜன
2014
11:01

திருப்பதி: திருமலையில், நேற்று மாலை, பக்தர்களின் கூட்டம் குறைவாக காணப்பட்டது. திருமலை, ஏழுமலையானை தரிசிக்க, புத்தாண்டு தினத்தன்று, தேவஸ்தானம் பக்தர்களுக்கு விதித்த, கட்டுபாட்டுகளை ஊடகங்கள் மூலம், அறிந்த பக்தர்கள், திருமலைக்கு, வருவதை தவிர்த்ததால், நேற்று மாலை, பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. அனைத்து தரிசன வழிகளும், பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி உள்ளது. நேற்று இரவு வரை, 300 ரூபாய் விரைவு தரிசனத்தில், ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஏழுமலையானை தரிசிக்க நேற்று மாலை தர்ம தரிசன பக்தர்களுக்கு, ஐந்து மணி நேரமும், பாதயாத்திரை பக்தர்களுக்கு, மூன்று மணி நேரமும் ஆனது. மேலும், நேற்று மாலை தர்ம தரிசன பக்தர்கள், ஆறு காத்திருப்பு அறைகளிலும், பாதயாத்திரை பக்தர்கள், ஏழு காத்திருப்பு அறைகளிலும் ஏழுமலையானை தரிசிக்க காத்திருந்தனர்.

திருமலையை சுற்றி பாதுகாப்பு வளையம்: திருமலை பாதுகாப்பை பலப்படுத்தும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு, பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால், அதன் பாதுகாப்பை பலப்படுத்த, மாநில பாதுகாப்புத் துறை, புதிய திட்டம் தாயாரித்துள்ளது. அதை, அமல்படுத்த, தேவஸ்தானம், 69 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இப்பணியை கண்காணிக்க, ஆந்திர அரசு, மூன்று அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இச்சூழலில், புத்தூரில், பயங்கரவாதிகள் கைது, திருமலையில் நடந்த, வனத்துறை அதிகாரிகளின் இரட்டை கொலை, பக்தர்கள் வேடத்தில், திருமலையில் செம்மரக் கூலிகள் கைது செய்யப்பட்ட விவகாரம் ஆகிய தொடர் சம்பவங்களால், பாதுகாப்பு வளையம் அமைக்கும் பணியை, பாதுகாப்புத் துறை தீவிரப்படுத்தி உள்ளது. திருமலைக்கு செல்லும், நான்கு மலைபாதை வழிகளும், வனப்பகுதி வழியே செல்லும், 10 வழிகளும், பாதுகாப்புத் துறை கீழ், கொண்டு வரப்பட உள்ளன. அப்பகுதியில், ஆயுதம் ஏந்திய வீரர்களுடன் கூடிய, சோதனைச் சாவடி, கண்காணிப்பு கோபுரம் ஆகியவை அமைக்கப்படுகின்றன. திருமலையில் நுழைவோரை கண்காணிக்க, 2,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு, உள்வட்ட மற்றும் வெளி வட்ட பாதுகாப்பு வளையம் அமைக்கும் பணி, ஒன்றரை ஆண்டுக்குள் முடிக்கப்படுகிறது. திருமலையில் நான்கு மாட வீதிகளின் பாதுகாப்பிற்காக, ஏழுமலையான் கோவிலை சுற்றி, அரை கிலோ மீட்டர், முதல்கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள், கொண்டு வரப்படுகிறது. வாகன சேவை காண வரும் பக்தர்கள், அங்கு அமைக்கப்படும், மெட்டல் டிடெக்டர் கதவு வழியாக மட்டும், மாட வீதிக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். திருமலையை சுற்றி, 9 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்படும், வெளி வட்ட சாலை பகுதியில், சுற்றுச்சூழல் மாசடையாமல் இருக்க, பாட்டரியால் இயங்கும் வாகனத்தை மட்டும் அனுமதிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar