யமதர்மன் என்னும் சொல்லையே எமதர்மன் என குறிப்பிடுகிறோம். இயமம் என்பதற்கு ஒழுங்கு,முறை, தர்மம் என்பது பொருள். தர்மன் என்றால் இரக்கசிந்தையோடு தானதர்மம் செய்பவன். எமதர்மன் உயிர்கள் ஆயுள் முடிந்ததும், அவரவர் செய்த பாவபுண்ணிய அடிப்படையில் தண்டனை தருகிறான். இதில் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. அதனால் அவனை தர்மதேவன் என்கிறோம்.