Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் வெள்ளி ... குன்றக்குடி கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜை துவக்கம்! குன்றக்குடி கும்பாபிஷேகம்: யாகசாலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 மார்
2014
10:03

ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர். ஓசூர் தேர்ப்பேட்டையில் உள்ள, சந்திரசூடேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும், தேர்த்திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா, கடந்த, 9ம் தேதி துவங்கியது. இதைத்தொடர்ந்து, கடந்த, 15ம் தேதி வரை, பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த கட்டளைதாரர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில், சிம்ம, ரிஷப, நாக, மயில், யானை வாகன உற்சவமும், திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடந்தது. விழாவை முன்னிட்டு, சந்திரசூடேஸ்வரர் ஸ்வாமிக்கு, புஷ்ப அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேர்த்திருவிழா, நேற்று காலை, 9.15 மணிக்கு துவங்கியது. தேர்த்திருவிழாவை, நகராட்சி தலைவர் பாலகிருஷ்ணாரெட்டி வடம் பிடித்து துவக்கி வைத்தார். விநாயகர் தேர் முன்னே செல்ல, சந்திரசூடேஸ்வரர் மற்றும் மரகதாம்பாள் வீற்றிருந்த தேர்கள் பின்னே சென்றன. முக்கிய மாட வீதிகள் வழியாக சென்ற தேருக்கு, மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தேர்கள்  மீது, உப்பு, மிளகு, வாழைப்பழம் ஆகியவற்றை வீசி, லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை, 4 மணிக்கு, மூன்று தேர்களும், நிலையை அடைந்தன. தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை முதலே, தேர்ப்பேட்டை பகுதியில், பக்தர்கள் குவிய துவங்கினர். மதியம், 12 மணிக்கு, பக்தர்கள் கூட்டத்தில், தேர்ப்பேட்டை மட்டும் இல்லாமல், ஓசூர் நகரமே ஸ்தம்பித்தது.கடந்த ஆண்டை போல, உயிர் பலி ஏற்படாமல் இருக்க, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோவில் தெப்பக்குளத்தை சுற்றி, கம்பு வேலிகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் சிவகாமி அம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.உலகப் புகழ் பெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar