கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, பெரியதக்கேப்பள்ளி கிராமத்தில் பெரிய முனீஸ்வரர் கோவில் புனரமைக்கப்பட்டதை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 1-ந் தேதி மாலை கங்கை பூஜை, கணபதி பூஜை, வாஸ்து பூஜை போன்ற பூஜைகளுடன் கும்பாபிஷேக வழிபாடு துவங்கியது. இரவு 7மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை யாகசாலை பூஜைக்கு பின் மங்கள வாத்தியங்கள் இசைக்க புனித நீர் குடங்கள், கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.