Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சீதா ராம கல்யாண மஹோத்ஸவம் கரூரில் மே ... விளையாட்டு மாரியம்மன் கோவிலில் உரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதாசிவ பிரமேந்திரர் ஆராதனை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2014
05:05

கரூர்: கரூர் அருகே நெரூரில் சதாசிவ பிரமேந்திரரின், 100 வது ஆராதனை விழா துவங்கியது. இதில், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். கரூர் மாவட்டம் நெரூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரர் கோவில் அருகே உள்ள அக்ரஹாரத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் ஆராதனை விழா நடந்து வருகிறது. நடப்பாண்டு, 100 வது ஆராதனை விழா, கடந்த, 4 ம் தேதி காலை, 8 மணிக்கு லட்சார்ச்சனையுடன் துவங்கியது. இதையடுத்து , நேற்று காலை, 11 மணிக்கு நெரூர் அக்ரஹார தெருவில் இருந்து சதாசிவ பிரமேந்திரர் உருவப்படம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அவரது ஜீவசமாதியில் வைத்து லட்சார்ச்சனை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து, மஹன் யாஸ அபிஷேகம், வேதபாராயணம் ஆகியவை நடத்தப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. பிறகு, மாலை, கர்நாடகா இசை கச்சேரி, உபன்யாசம், வளர் இளம் கலைஞர்கள் அரங்கேற்றம் ஆகியவை நடந்தது. வரும் 9 ம் தேதி சதாசிவ பிரமேந்திரர் உற்சவம் சிறப்பாக நடக்கிறது. அலங்கரிப்பட்ட படம் விழா பந்தலுக்கு வந்ததும், சிறப்பு ஆராதனை நடைபெறும். பிறகு, அன்று மதியம் 1 மணிக்கு அக்ரஹாரத்தில் பக்தர்கள் அமர வைக்கப்பட்டு, இலையில் அன்னதானம் வழங்கப்படும். பக்தர்கள் சாப்பிட்டு முடித்த இலையில் ஆண், பெண் பக்தர் கள் அங்கபிரதட்சணம் செய்வார்கள். அப்போது, சதாசிவ பிரமேந்திரரின் கீர்த்தனைகள் பாடப்படுகிறது. ஆராதனை விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு இலையில் அன்னதானம் வழங்கும் போது, அதில், எதாவது ஒரு ரூபத்தில் சதாசிவ பிரமேந்திரர் அமர்ந்து சாப்பிடுவதாக ஐதீகம் உள்ளது. இதனால், பக்தர்கள் சாப்பிட்ட இலையில் அங்கபிரதட்சணம் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங் களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
புது டில்லி;  தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar