புதுச்சேரி: அரியூர் உலகவாழியம்மன் கோவிலில், சித்திரை திருவிழாவில் மஞ்சள்நீராட்டு விழா நடந்தது. அரியூர் உலக வாழியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா, கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று, பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. தினம் காலை, மாலையில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து, இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. 6ம் தேதி, முத்துப் பல்லக்கில் அம்மன் வீதி உலா, 9ம் தேதி செடல் உற்சவம் நடந்தது. அதைத் தொடர்ந்து நடந்த தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். நேற்று நடந்த, மஞ்சள் நீராட்டு விழாவில், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், சுவாமி வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.