Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ராம சகோதரர்களை போல் வாழ வேண்டும்: ... புனித அந்தோணியார் தேவாலயத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரிவரதராஜ பெருமாள் கோவிலில் 9ம் தேதி கும்பாபிஷேக விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2014
12:06

குறிச்சி : வெள்ளலுார் பூமிநீளா நாயகி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் ௯ம் தேதி நடக்கிறது. வெள்ளலுார் நொய்யல் நதிக்கரை அருகே ஆயிரமாண்டுகள் பழமையான பூமிநீளா நாயகி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. சோழர் மற்றும் பாண்டிய மன்னர்களால், திருப்பணி மேற்கொள்ளப்பட்ட கோவில் இது. தற்போது பல நுாற்றாண்டுகளுக்கு பின், கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோவிலில் புதியதாக மகாலட்சுமி, ஆண்டாள், வீர ஆஞ்சனேயர், யோக நரசிம்மர் சக்கரத்தாழ்வார், கருடாழ்வார் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகளும், ௩௬ அடி உயரத்தில், தேக்கு மரத்தாலான கருட கம்பமும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், பலி பீடம், மகா மண்டபம், வசந்த மண்டபம் அமைக்கப்பட்டு, விமானம் மற்றும் மதில் சுவர்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. தற்போது புதிய பொலிவுடன் காட்சியளிக்கும் இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம், வரும் ௯ம் தேதி காலை ௧௦.௩௦ மணிக்கு நடக்கிறது. விழா நேற்று முன்தினம் காலை ௭.௩௦ மணிக்கு, மகா சுதர்சன ஹோமத்துடன் துவங்கியது. மாலை, நுாதன பிம்பங்களுக்கு பிம்பசுத்தி திருமஞ்சனம் நடந்தது. நேற்று காலை நுாதன த்வஜஸ்தம்ப பிரதிஷ்டையும், சுமங்கலி பூஜையும் நடந்தது. மாலையில், பல்வேறு கோவில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பூஜித்த தீர்த்தக்குடங்கள் அனைத்தும், தேனீஸ்வரர் கோவிலிலிருந்து, யானை, குதிரை, பசு மற்றும் மங்கள வாத்தியங்களுடன் கோவிலுக்கு அழைத்து வரும் முக்கிய நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 6.௦௦ மணிக்கு, நித்ய திருவாராதனமும், 8.௦௦ மணிக்கு மகா தீபாராதனையும், மாலை 4.௦௦ மணிக்கு அக்னி ஸங்க்ரஹணமும் நடக்கிறது. நாளை (௮ம் தேதி) விமான கோபுர கலச ஸ்தாபனமும், அஷ்டபந்தன சாற்றுதலும், 108 கலச ஸ்நபனமும் நடக்கிறது. 9ம் தேதி காலை 10.30 மணிக்கு, அவிநாசி முரளிபட்டாசார்யார் தலைமையில், மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானமும், மாலை 4.௦௦ மணிக்கு திருக்கல்யாணம் மற்றும் கருட வாகன புறப்பாடும் நடக்கிறது.விழா முன்னிட்டு, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவும் நடக்கின்றன. ஏற்பாடுகளை, கோவில் திருவிழா கமிட்டியினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar