Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளத்தீஸ்வரர் கோவிலில் ... புதிய ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாதர் உலா! புதிய ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி முருகன் கோவில்களில் வைகாசி விசாகம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2014
01:06

வைகாசி விசாகத்தை ஒட்டி, நேற்று குமரகோட்டம் சுப்ரமணியசுவாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. வல்லக்கோட்டை, திருப்போரூர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காஞ்சி குமரகோட்டம் சுப்ரமணியசுவாமி காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்ரமணியசுவாமி கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் திருநாளான நேற்று முன்தினம் இரவு, மாவடி சேவை உற்சவம் கோலாகலமாக நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் வள்ளி,  ய்வானையுடன் சுப்ரமணிய சுவாமி ராஜ வீதிகளில் வலம் வந்தார். 10ம் திருநாளான நேற்று காலை, 8:00 மணிக்கு வள்ளி, தெய்வானை உடனான சுப்ரமணியர் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, தேரோட்டம் நடந்தது.

முக்கிய வீதிகளில் தேர் வலம் வந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுப்ரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர். இரவு கேடயம் மங்களகிரி வாகனத்தில் முருகன் வீதிவுலா வந்தார். வல்லக்கோட்டை சுப்ரமணிய சுவாமி ஐந்தாம் ஆண்டு வைகாசி விசாக பிரம்மோற்சவத்தின் பத்தாம் நாளான நேற்று, காலை, 10:00 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கேடய வாகனத்தில், வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணிய சுவாமி எழுந்தருளி, திருவீதி உலா வந்தார். தொடர்ந்து, வஜ்ஜிர குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டு, தீர்த்தவாரி நிகழ்ச்சியில், புனித நீராடினர். வைகாசி விசாக விழா வைகாசி விசாகத்தையொட்டி, திருப்போரூர் கோவிலில் கந்தசுவாமி உற்சவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மலர் அர்ச்சனையும், தீப து?ப ஆராதனையும் நடந்தன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, கந்தனை வழிபட்டனர்.  திருப்போரூர் சிதம்பர சுவாமி மடத்தில் 355வது குரு பூஜை சிறப்பு வழிபாடும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
கோவை: உக்கடம் பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகளான விநாயகப் பெருமான், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar