Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பவானி சங்கமேஸ்வரருக்கு ரூ.10 ... ஈஷாவில் தியானலிங்க பிரதிஷ்டை விழா! ஈஷாவில் தியானலிங்க பிரதிஷ்டை விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை கோனியம்மனுக்கு கோபுரகலசங்கள் தயார்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2014
11:06

கோவை : கோனியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் மேற்பகுதியில் வைப்பதற்காக தங்கக்கலசங்கள் தயாரிப்பு பணி நிறைவடைந்து,  விரைவில் கோவிலுக்கு வழங்கப்பட உள்ளது.கோவையின் காவல் தெய்வமான, கோனியம்மனுக்கு, ஜூலை 11ல், குடமுழுக்கு விழா  நடத்தப்படுகிறது. இதற்காக, கோவிலை சுற்றி, கட்டட, கட்டுமானம், வர்ணம்பூசுதல் உள்ளிட்ட அனைத்துப்பணிகளும் வேகமாக  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பணி, தற்போது நிறைவடைந்துள்ளது. 93 அடி  உயரத்தில், ஏழு நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது, ராஜகோபுர திருப்பணிக்காக, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவு  செய்யப்பட்டுள்ளது. மிகவும் பிரமாண்டமாக காட்சியளிக்கும் ராஜகோபுரத்தின் மேற்பகுதியில் வைப்பதற்கான கோபுரக்கலசங்கள்  தயாரித்து வழங்கும் பணியை, கோவை தங்கநகை உற்பத்தியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கோவையில், ஆயிரத்துக்கும்  மேற்பட்ட தங்கநகை உற்பத்தியாளர்கள் உள்ளனர். கோபுரக்கலசங்களை தயாரித்து வழங்கும் பொறுப்பை, கோவையிலுள்ள தங்கநகை  உற்பத்தியாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.கோபுரக்கலசங்கள் தயாரித்து வழங்கும் பணி, கடந்த சில மாதங்களாக நடந்தது; தற்போது  பணிகள் நிறைவடைந்துள்ளன. இவற்றை, விரைவில் உபயதாரர்கள் கோவில் நிர்வாகத்திடம் சமர்பிப்பார்கள்.ஜொலிக்கும் தங்கக்கலசம் :  கோனியம்மன் கோவிலுக்கு தங்கநகை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஒன்பது கோபுரக்கலசங்கள் வழங்கப்பட உள்ளன. இவை செம்பு  உலோகத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒன்றேமுக்கால் அடி அகலமும், மூன்றே முக்கால் அடி உயரமும் கொண்டுள்ளது. செம்பு  கலசத்தின் மேற்பகுதியில் ஆறு அடுக்குகளில் தங்கதகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. ஒன்பது கலசத்துக்கும் சேர்த்து, 2,682 கிராம் தங்கம்  பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு செம்பு கலசத்தின் எடை 20.5 கிலோ. இவற்றை கோவையிலுள்ள தங்கநகை தயாரிப்பாளர்கள் இணைந்து  தயாரித்து கோவிலுக்கு உபயமாக வழங்க உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவா: இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் வெண்கல சிலையை கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகாலி ... மேலும்
 
temple news
உடுப்பி; உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தரிசனம் தரிசனம் செய்தார். தொடர்ந்து ... மேலும்
 
temple news
மும்பை; காஞ்சி பீடாதிபதி பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை மும்பையில் உள்ள ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் 5ம் நாளானா காலை  உற்சவத்தில் கண்ணாடி ... மேலும்
 
temple news
பழநி: பழநியில் திருகார்த்திகை தீபத்திருவிழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் நேற்று (நவ.,27) மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar