Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 100 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் கோயிலில் ... கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்! கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் தேரில் பைபர் குதிரைகள்: ஆகம விதிமுறை மீறல் என புகார்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2014
10:07

திருநெல்வேலி :நெல்லையப்பர் கோயில் தேருக்கு பைபர் குதிரைகள் பொருத்தப்பட்டது ஆகம விதிக்கு முரணானது என கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோயிலில் ஆனித்திருவிழா நடக்கிறது. வரும் 10ம் தேதி தேரோட்டம். நெல்லையப்பர் தேர், தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேராகும். 450 டன் எடை கொண்டது. 35 அடி உயரமும், 28 அகலமும் கொண்டது . 1505ம் ஆண்டில் முதன்முறையாக இங்கு தேரோட்டம் நடந்துள்ளது. எனவே இந்த ஆண்டு நடப்பது 509வது ஆண்டு தேரோட்டமாகும். சுவாமி தேருக்கு முன்பாக வண்ணமயமான நான்கு குதிரைகள் இணைக்கப்பட்டிருக்கும். மரத்திலான குதிரைகள், பழுதடைந்துவிட்டதால் இந்த ஆண்டு புதிதாக நான்கு குதிரைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் அவை பைபர் எனப்படும் நெகிழியால் ஆனவை. எனவே நெல்லை விஸ்வகர்ம விடுதலை இயக்கத்தினர் கலெக்டரை சந்தித்து மனுகொடுத்தனர். அதில் நெல்லையப்பர் கோயிலின் அனைத்து அம்சங்களும் ஆகமவிதிமுறைப்படிதான் நடக்கிறது. தேர்சிற்பங்கள் அனைத்தும் மரத்தில் ஆனவை. ஆனால் குதிரைகள் பைபரில் தயாரிக்கப்பட்டிருப்பது ஆகமவிதிமுறையை மீறிச்செயலாகும். எனவே மரச்சிற்ப சிலையையே பயன்படுத்தவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கோயில் செயல்அலுவலர் யக்ஞ நாராயணனிடம் கேட்டபோது, மரக்குதிரை சிற்பங்கள் பழுதானதால், திருப்பூரை சேர்ந்த உபயதாரரிடம் குதிரைகள் செய்துதருமாறு கேட்டுக்கொண்டோம். இதற்கான மூன்றரை லட்சம் ரூபாய் செலவும் அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். இதில் ஆகமவிதிமுறை மீறல் இருப்பதாக தெரியவில்லை என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கார்த்திகை திருவிழா தமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் ஒன்று. இன்று வீடுகளில் தீபமேற்றி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, கோவில் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழாவில் நேற்று பரணி தீபம் ஏற்றப்பட்டது.இன்று ... மேலும்
 
temple news
மதுரை : ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar