சிவகங்கை : சிவகங்கை விஷ்ணு துர்க்கை அம்மன் கோயிலில் நேற்று காலை 10:30 முதல் 11 மணிக்கு, காப்பு கட்டுதலுடன் ஆடிப்பூர திருவிழா துவங்கியது.மாலை 6 மணிக்கு, சிறப்பு அலங்காரத்துடன் காட்சி அளித்த அம்மனுக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஜூலை 30ம் தேதி வரை நடக்கும் விழாவில், ஜூலை 25 அன்று மாலை திருவிளக்கு பூஜை நடைபெறும். ஜூலை 29 அன்று மாலை சண்டியாகமும், இரவு 10 மணிக்கு, 64 பைரவர்கள், 64 யோகிகள் தீபாராதனை நடைபெறும். ஜூலை 30 அன்று காலை விஸ்வநாத சுவாமி கோயிலில் இருந்து விஷ்ணு துர்க்கை அம்மன் கோயில் வரை, பால்குடம், பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்தி செலுத்துவர். கோயில் நிர்வாகத்தினர் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.