Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் மதுரைவீரன் கோவில் ... நாளை வரமகாலட்சுமி பண்டிகை! நாளை வரமகாலட்சுமி பண்டிகை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழ் ரோமன் எண்களுடன் மைல்கல்: கந்தர்வகோட்டையில் கண்டெடுப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 ஆக
2014
12:08

கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் அருகே, தமிழ் மற்றும் ரோமன் எண் பொறிக்கப்பட்ட மைல் கல்லும், தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி, மாப்பிள்ளை நாயக்கன்பட்டியில், தமிழ் மற்றும் அரபு எண் பொறிக்கப்பட்ட மைல்கற்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தமிழ்நாடு அறிவியல் இயக்க குழுவின், புதுக்கோட்டை மாவட்டத் துணைத் தலைவர் மணிகண்டன் கூறியதாவது:புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் அருகே, அன்னவாசலில் அரசு மாணவர் விடுதிக்கு எதிரே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் மற்றும் ரோமன் எண் பொறிக்கப்பட்ட மைல்கல் உள்ளது.இது போல, இரண்டு மைல்கற்கள், தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி மற்றும் மாப்பிள்ளைநாயக்கன்பட்டி ஆகிய ஊர்களில் சாலை ஓரத்தில் கிடந்தது. தமிழ் எண் பயன்பாடு சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளும் எண்ணத்தோடு பல்வேறு கிராமங்களிலும் தகவல் சேகரித்து வருகிறோம். சில மாதங்களுக்கு முன், தமிழ் மற்றும் ரோமன் எண் பொறிக்கப்பட்ட மைல்கற்கள், தஞ்சாவூர் புதுக்கோட்டை நெடுஞ்சாலையிலுள்ள கூழியான் விடுதி கிராமத்திலும், விராலிமலை நெடுஞ் சாலையிலுள்ள அன்னவாசலிலும் கண்டறிப்பட்டுள்ளது.

தற்போது, புதுக்கோட்டை மாவட்டம், கந்தர் வகோட்டை எல்லைப்பகுதிகளான தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி மற்றும் மாப்பிள்ளை நாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில், தமிழ் அரபு எண் பொறிக்கப்பட்ட மைல்கற்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த மைல்கற்கள், 18ம் நூற்றாண்டில், சாலை அளவீட்டு முறை நடைமுறைப்படுத்திய பின், நடப்பட்டடுள்ளது. தஞ்சாவூர் அரண்மனை அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லோடு, தற்போது அடையாளம் காணப்பட்ட மைல்கற்களின் எழுத்தமைதி எழுத்துருக்கள், கல்லின் வடிவம் ஆகியவை ஒப்புநோக்குப்பட்டது. இந்த மைல்கற்கள், ஒரே காலத்திலானவை என்பது தெரிய வந்துள்ளது. புதுக்கோட்டை பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள அனைத்து மைல்கற்களும், தமிழ் ரோமன் எண்களுடனும், தஞ்சாவூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மைல்கற்களில் தமிழ் அரபிக் எண்களும் பொறிக்கப்பட்டுள்ளதன் மூலம், புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதிகளில், தமிழ் ரோமன் எண் அலுவலக பயன்பாடுகளில் முதன்மை பெற்றிருந்தது தெரிகிறது. ஆய்வுக் குழுவினரால் கண்டெடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க மைல் கற்களை, தமிழ்நாடு தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்களில் ஒப்படைக்க, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தமிழக தொல்லியல் கழகம் மூலமாக உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான, ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar