திருப்போரூர்: திருப்போரூர் முத்து மாரியம்மன் கோவிலில், கூழ்வார்த்தல் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. திருப்போரூர் கிரிவல பாதையில், முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், கூழ்வார்த்தல் விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு 10ம் ஆண்டு, கூழ்வார்த்தல் விழா, கடந்த 14ம் தேதி துவங்கி நடந்து வந்தது. தினசரி அம்மனுக்கு மகாபிஷேகம், தீபாராதனை நடந்தது. நேற்று பிரதான விழாவான கூழ்வார்த்தல் விழா நடந்தது. முன்னதாக சரவணப்பொய்கையில் இருந்து கங்கை நீர் எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று மாலை, மலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.