மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் கிருத்திகையை சிறப்பு வழிபாடுகள் நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் கோவிலில் ÷ நற்று ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. காலை 11 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள பாலசித்தர், வினாயகர் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு நறுமணப் பொருட்களினால் சிறப்பு அ பிஷேகம் நடந்தது. 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு மகாதீபாராதனை நடந்தது. மூலவர் தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்தார். பிற்பகல் ஒரு மணிக்கு கோவில் மண்டபத்தில் அன்னதானம் வழங்கினர். பக்தர்கள் கோவில் வளாகத்தில் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்தி கடனைச் செலுத்தினர். இரவு 9 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய் திருந்தார்.