Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தல்லாகுளம் பெருமாள் கோயில் ... பாதூர் பிரத்தியங்கராதேவி கோவிலில் நிகும்பலா யாகம்! பாதூர் பிரத்தியங்கராதேவி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காகித கூழ், களிமண்ணால் தயாரிக்கப்பட்ட 4000 விநாயகர் சிலைகள் தயார்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 ஆக
2014
12:08

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு,  சிறிய மற்றும் பெரிய விநாயகர் சிலைகள், 4,000க்கும் மேற்பட்டவை, பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட உள்ளன. இந்தாண்டு விநாயகர் சதுர்த்திக்காக, ஆந்திர மாநிலம், மங்களம், பொம்மல் குவார்ட்டர்சிலிருந்து வந்திறங்கியுள்ள நுாற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள், கொசப்பேட்டையில் விற்பனைக்கு காத்திருக்கின்றன. காகிதக் கூழால் செய்யப்பட்ட சிலைகள், இரண்டடி முதல் எட்டடி வரை உள்ளன. இரண்டாயிரம் ரூபாய் முதல் 20ஆயிரம் ரூபாய் வரை தரம் பிரிக்கப்பட்டுள்ளன. மூஞ்சூறு விநாயகர், சிவ நர்த்தன விநாயகர், மான், அன்னம், மயில் மற்றும் சிங்க வாகன விநாயகர், அனுமன், நரசிம்மர், விநாயகர் முகம் கொண்ட மும்முக விநாயகர், சித்தி புத்தி விநாயகர் என, பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் உள்ளன. சவுகார்பேட்டையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட உள்ளன.

களிமண் விநாயகர் சிலை குறித்து, சிலை தயாரிப்பாளர் மணிகண்டன் கூறுகையில், இந்தாண்டு மாதக்கடைசி என்பதால் களிமண் விநாயகர் சிலைக்கு கிராக்கி குறைந்து விட்டது. களிமண் கிடைப்பதும் சிரமமாகி விட்டது. வீட்டு பணிகள் நடந்தால் தான், களிமண் கிடைக்கிறது. களிமண் விநாயகர் சிலைகள் 20 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை கிடைக்கின்றன, என்றார். வடமாநிலத்தவர் அதிகம் வாழும் சவுகார்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் விநாயகர் சதுர்த்தி, 10 நாட்கள் கொண்டாடப்படும். அதற்காக ரசாயனம் கலக்காத முழுவதும் களிமண்ணாலான கலை நயத்துடன் கூடிய விநாயகர் சிலைகளை சவுகார்பேட்டையில் வழிபாட்டுக்காக வைப்பது வழக்கம். இதுகுறித்து, சிலை தயாரிப்பாளர் சம்பத் கூறுகையில், இந்தாண்டு 29ம் தேதி பூஜை, பஜனையுடன் விநாயகர் சதுர்த்தி விழா துவங்கும். தொடர்ந்து பத்து நாள் பூஜை, பஜனை மற்றும் பிரசாத வினியோகம் இருக்கும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் இன்று முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை கிரௌஞ்சமலை கனக்சௌரி கார்த்திக் சுவாமி கோயிலில் ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானலில் வைகாசி விழாவையடுத்து அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. கொடைக்கானல் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி கனியாக பரமேஸ்வரி ஜெயந்தியை ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தங்க ரிஷப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar