கல்லல் கோயில் தெப்பக்குளம் 20 ஆண்டுக்குப் பின் தூரெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2014 12:09
கல்லல் : கல்லல் சோமசுந்தரம் சவுந்தரநாயகியம்மன் கோயில் தெப்பக்குளம் பழமையானது. இப்பகுதி மக்களின் முக்கியமான நீர் ஆதாரமாகும். இந்த குளத்தால் நிலத்தடி நீர் மட்டமும் பாதுகாக்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தெப்பக்குளம் தூர்வாரப்படாததால் சேறும் சகதியுமாக தண்ணீர் துர்நாற்றமடித்தது. தெப்பக்குளத்தின் ஒரு பகுதி இடிந்தும் விழுந்தது. இதனால் மக்கள் குளிக்க பயன்படுத்தாமல் இருந்தனர். இந்த தெப்பக்குளம் தேவஸ்தானத்திற்கு சொந்தமானது. சகதி அதிகமாக காணப்பட்டதால் அடிக்கடி உயிர் இழப்பு ஏற்பட்டது. கல்லல் கோவிலின் தேவஸ்தான கவுரவ கண்காணிப்பாளர் தண்ணீர்மலை செட்டியார் மூலம் சமூக ஆர்வலர் ஆறுமுகம்,முன்னாள் ஊராட்சி தலைவர் வடிவேல் அனுமதி பெற்று வணிகர்கள்,பொதுமக்களிடம் நிதி வசூல் செய்து தற்போது தெப்பக்குளத்தில் தூரெடுக்கும் பணி நடந்து வருகிறது.