Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்லல் கோயில் தெப்பக்குளம் 20 ... ராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை : 20 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அண்ணாமலையாருக்கு வாடகை செலுத்தாத 162 பேர்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 செப்
2014
12:09

திருவண்ணாமலை அருணாச்சலேசுவரருக்கு சொந்தமாக, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்டளை நிலங்களில் முறையாக வாடகை செலுத்தாத, 162 வாடகைதாரர்கள் குறித்த பட்டியலை, கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேசுவரர் கோவிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பக்தர்கள், தானமாகவும், குறிப்பிட்ட கட்டளை பெயரிலும் கொடுத்த ஏராளமான நிலங்கள் உள்ளன.இந்த நிலங்களை, ஏராளமானோர் வாடகை செலுத்துவதாக ஒப்புக்கொண்டு, பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இவர்களில் பெரும்பாலானோர், இந்நிலங்களுக்கான வாடகையை கோவில் நிர்வாகத்துக்கு செலுத்துவதில்லை.

பாதிப்பு: இதனால், இந்நிலங்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தை கொண்டு மேற்கொள்ள வேண்டிய கட்டளை பணிகளை, முறையாக செய்ய தேவையான நிதி கிடைப்பதில், சிக்கல் ஏற்படுகிறது.எனவே, இதுபோன்ற கட்டளை நிலங்களில் நிலுவை தொகையை வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்க, கோவில் நிர்வாகம் முடிவெடுத்து உள்ளது. இவ்வகையில், சென்னை, அடையாறு, ஊரூர் பகுதியில் நிலுவை செலுத்தாத வாடகைதாரர்கள் குறித்த பட்டியல், சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இப்போது, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள நிலங்களின் வாடகைதாரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

எச்சரிக்கை:இது குறித்து அருணாச்சலேசுவரர் கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:சென்னை, ராயப்பேட்டையில், பரணி அபிஷேக கட்டளையாக கொடுக்கப்பட்ட நிலம் உள்ளது. ராயப்பேட்டையில், அவ்வை சண்முகம் சாலை, வி.எம்.தெரு, சைவமுத்தையா தெரு ஆகிய பகுதிகளில் உள்ள இந்நிலங்களில், கடந்த பல ஆண்டுகளாக, 162 பேர் வாடகை செலுத்தாமல் இருந்து வருகின்றனர்.சட்ட விரோதமாக...இவர்களில் பெரும்பாலானோர், சட்ட விரோதமாக நிலங்களை உள்வாடகைக்கு விட்டு, லட்ச கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.இவர்கள் அனைவரும், அடுத்த, ஏழு நாட்களுக்குள் வாடகை நிலுவையை செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், வாடகை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, இந்நிலங்களில் உள்ள கட்டடங்கள், ஆக்கிரமிப்புகளாக கருதப்பட்டு, சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் சிவகாமி அம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.உலகப் புகழ் பெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar