மதுரை அருகிலுள்ள மடப்புரத்தில், உமையவள் பத்திரகாளியாக காட்சி தருகிறாள். பவுர்ணமி தோறும் மாலையில் தொடங்கும் பூஜை இரவு வரை நடைபெறும். அன்று பாலபிஷேகம் செய்து அன்னையின் மனதைக் குளிர வைப்பர். மடப்புரம் காளிக்கு எலுமிச்சங்கனி மாலையே மிகவும் விருப்பமானது. ஆடிவெள்ளிக் கிழமைகளில் மக்கள் பொங்கலிட்டு, மாவிளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்வர். புதிதாக வாங்கும் வாகனங்களைக் கொண்டுவந்து, காளியைப் பூஜித்து செல்வோருக்கு விபத்துக்கள் நேராது என்பது நம்பிக்கை. இங்கு காளி திரிசூலத்தை ஏவும் கோலத்தில் காட்சி தருகிறாள். தன்னை நம்பி வந்தோரைக் காக்கும் நோக்கில், தன் ஒரு காலை முன்னே வைத்து, துன்பப்படுவோருக்கு அருள் செய்வதற்கு ஆயத்தமாக காட்சி அளிக்கிறாள்.