பதிவு செய்த நாள்
20
செப்
2014
12:09
அந்தியூர்: அந்தியூர் அடுத்த பள்ளியபாளையத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள், விவசாயம் மற்றும் கூலித்தொழில் செய்து வருகின்றனர்.கடந்த ஆண்டு போல், இந்த ஆண்டும் பருவ மழை பொய்த்துப்போனதால், விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர்.இந்நிலையில், மழை வேண்டி ஊரில் கஞ்சி எடுத்து, சிறப்பு பூஜை செய்தால், மழை பெய்யும் என்ற நம்பிக்கையில், நேற்று முன்தினம் ஊர்மக்களுக்கு, அறிவிப்பு கொடுத்து, நேற்று காலை, ஒவ்வொரு வீடாக சென்று, கஞ்சி சேகரித்தனர்.பின், மாரியம்மன் கோவிலில், அவற்றை வைத்தனர். முதிய பெண்கள், ஊர் எல்லைக்கு சென்று, ஓப்பாரி பாட்டுப்பாடி, மழை வேண்டி, வருந்தி அழுதனர்.அப்போது கோவில் பூசாரி தீர்த்தம் கொண்டு வந்து, அவர்கள் மீது தெளித்து, "மழை பெய்யும் வாருங்கள் என்று கூறி, அழைத்து வந்தார்.பின், மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.பூஜைக்குப்பின், அங்கு கூடி இருந்த மக்களுக்கு, கஞ்சியை பிரசாதமாக வழங்கினர். மழை வரும் என்ற நம்பிக்கையில், அனைவரும் கலைந்தனர்.