அந்தியூர்: அந்தியூர்
ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில், நவராத்திரியை முன்னிட்டு, நாளை (26ம் தேதி)
லட்சார்ச்சனை திருவிழா நடக்க உள்ளது. அன்று காலை, ஐந்து மணிக்கு கணபதி
ஹோமம், எட்டு மணிக்கு அபிஷேக ஆராதனை மற்றும் முதற்கால அர்ச்சனைகளுடன்,
தொடர்ந்து ஐந்து கால அர்ச்சனைகள் நடக்கிறது. மாலை, ஆறு மணிக்கு
லட்சார்ச்சனை சிறப்பு பூஜைகள், பிரசாதம் வழங்கப்படுகிறது. பக்தர்கள்
பங்கேற்க, செயல் அலுவலர் பாலமுருகன் அழைப்பு விடுத்துள்ளார்.