வால்பாறை: வால்பாறையில் உள்ள பல்வேறு கோவில்களில் விஜயதசமி மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது.வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காலை 5.00 மணிக்கு கணபதி பூஜையும், 6.00 மணிக்கு அபிேஷக பூஜையும், 7.00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.விஜயதசமி மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி, வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவிலில் காலை 5.00 மணிக்கு கணபதி ேஹாமமும், 6.00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், 7.00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தன. வால்பாறை எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவில், ஈட்டியார் கருமாரியம்மன் கோவில், சிறுகுன்றா மாகாளியம்மன் கோவில், முத்துமுடி எஸ்டேட் முத்துமாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.