Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோரக்க சித்தர் ஆசிரமத்தில் பவுர்ணமி ... திருக்கோவிலூர் தட்சணாமூர்த்தி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு! திருக்கோவிலூர் தட்சணாமூர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி, ராமேஸ்வரம் கோயில்களில் நடை சாத்தல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2014
11:10

பழநி: சந்திரகிரகணத்தை முன்னிட்டு, நேற்று பழநி மலைக்கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடை சாத்தப்பட்டது. பழநி மலைக்கோயில் ஞான தண்டாயுதபாணி சுவாமி சன்னதி வழக்கம் போல் நேற்று காலை 6:00 மணிக்கு திறக்கப்பட்டது. விஸ்வரூப தரிசனம், விளாபூஜை, பகல் 12:00 மணிக்கு உச்சிகாலபூஜை நடைபெற்றது.

Default Image
Next News

வழக்கமாக மாலை 5:30 க்கு நடைபெறும் சாயரட்சை பூஜை, நேற்று பகல் 1:30 க்கு நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த பின், சந்திரகிரகணத்தை முன்னிட்டு பகல் 2:00 மணிக்கு நடை சாத்தப்பட்டது. மாலை 6:05 மணிக்கு கிரகணம் முடிந்த பின், கோயில் மூலஸ்தானம், உட்பிரகாரம் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டு, சம்ப்ரோஷணப் பூஜைகள் நடந்தது. கிரகணம் காரணமாக, பக்தர்களின் கூட்டம் குறைவாக காணப்பட்டது. மாலை 6:00 க்கு மேல் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் மலைக்கோயிலை கிரிவலம் வந்து, ஞானதண்டாயுதபாணி சுவாமியை தரிசித்தனர்.

ராமேஸ்வரம்: ராமநாதசுவாமி கோயிலில் நேற்று அதிாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஸ்படிகலிங்க பூஜை, ஐந்து கால பூஜை நடைபெற்றது. பின், காலை 11 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு, மாலை 3 மணிக்கு கோயிலில் இருந்து கிரகண சுவாமி புறப்பாடாகி, அக்னி தீர்த்த கரையில் எழுந்தருளியதும், கோயில் குருக்கள் கிரகண சுவாமி தீர்த்த வாரி நிகழ்ச்சி, மகா தீபாராதனை செய்தனர். பின், சந்திர கிரகணம் முடிந்ததும் மாலை 6:30க்கு, கோயில் நடை திறக்கப்பட்டது. பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் புனித நீர் ஊற்றி சுத்தம் செய்தவுடன், பூஜைகள் நடைபெற்றதும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar