பதிவு செய்த நாள்
14
அக்
2014
12:10
ஊக்கத்துடன் பணியாற்றும் கடக ராசி அன்பர்களே!
இம்மாதம் புதன் நவ. 2-ந் தேதி முதல் நற்பலன் கொடுப்பார். சுக்கிரன்அக். 20லும், நவ. 13லும் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். அதோடு செவ்வாய், ராகு ஆகியோராலும் நன்மையே. பொருளாதார வளம் சிறக்கும். எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். பகைவர் தொல்லை நீங்கும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அக். 20க்குள் பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதன் பின் செல்வாக்கு அதிகரிக்கும். விருந்து விழா என சென்றுவர வாய்ப்பு உண்டு. பெண்கள் உறுதுணையாகச் செயல்படுவர். நவ. 13 க்கு பிறகு நண்பர்களின் உதவி கிடைக்கும். உடல்நலம் சிறப்படையும்.
தொழில், வியாபாரத்தில் நவ.2 வரை அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். அதன் பின் புதன் சாதகமான இடத்திற்கு செல்வதால் நிலைமை சீராகி லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். புதிய தொழில் தொடங்கவும் யோகமுண்டு.
பணியாளர்கள் மாதத் தொடக்கத்தில் அதிகமாக உழைக்க வேண்டியதுஇருக்கும். ஆனால் நவ. 2க்குப் பிறகு வருமானமும்,பதவி உயர்வும் கிடைக்கும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள்
சிறப்பான முன்னேற்றத்தை காணலாம்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது நல்லது. நவ. 2 க்கு பிறகு புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
கலைஞர்கள் புகழ், பாராட்டு பெற்று மகிழ்வர். அரசியல்வாதிகள் திருப்திகரமாகச் செயல்படுவர்.
விவசாயகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கால்நடை வகையில் ஆதாயம் கூடும். புதிய சொத்து வாங்கலாம்.
பெண்கள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெறுவர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். மாத இறுதியில் பெரியோர் ஆதரவு கிடைக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி கைகூடும்.
நல்ல நாள்: அக். 18, 21, 22, 23, 28, 29, 30, 31, நவ. 6, 7, 8, 9, 13, 14
கவன நாள்: நவ.1, 2, 3 சந்திராஷ்டமம், கவனம்
அதிர்ஷ்ட எண்: 4, 5 நிறம்: வெள்ளை, சிவப்பு
வழிபாடு: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள். ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். சனியன்று விநாயகரை வணங்கி வாருங்கள்.