பதிவு செய்த நாள்
14
அக்
2014
12:10
ஆர்வத்துடன் உழைத்திடும் சிம்ம ராசி அன்பர்களே!
இந்த மாதம். சூரியன் நன்மைகளை தர உள்ளார். சமூக செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் மேம்படும். லாபம் சிறப்பாக இருக்கும். சனி,சுக்கிரன் மாதம் முழுவதும் நற்பலன் அளிப்பர். நல்ல பொருளதார வளம் சிறக்கும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் வீண் விவாதத்தை தவிர்க்கவும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அக். 20 க்கு பிறகு கணவன், மனைவி இடையே அன்பு கூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உறவினர் வகையில் வீண் விரோதம் உருவாக வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். பொருள் களவு போக நேரிடலாம் கவனம். செவ்வாயால் உடல்நலம் பாதிக்கப்படலாம்.
தொழில், வியாபாரத்தில் சூரியனால் ஏற்பட்ட தடங்கல் அடியோடு விலகும். அக். 20 க்குள் அரசாங்க வகையில் சலுகை கிடைக்கும். எதிர்பாராத வகையில் திடீர் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. தொழில் ரீதியான பயணத்தால் நன்மை காண்பீர்கள்.
பணியாளர்கள் கடினமாக உழைக்க நேரிடும். அதற்கான நன்மையும் காண்பீர்கள். அக். 20க்கு பிறகு செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வும் பெற்று மகிழ்வீர்கள். நவ. 2 க்கு பிறகு அரசு ஊழியர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.
கலைஞர்கள் சிறப்பான புகழோடு காணப்படுவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர்.
அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசியல்வாதிகள் சுமாரான பலனையே காண்பர்.
மாணவர்கள் தொடர்ந்து சிரத்தை எடுத்து முன்னேற வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் வழிகாட்டுதலைக் கேட்டுப் பெறவும்.
விவசாயிகள் வியர்வை சிந்தி உழைக்க வேண்டியிருக்கும். பயறு வகைகள், பழ வகைகள் மூலம் நல்ல வருவாய் காணலாம்.
பெண்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியோடு காணப்படுவர். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும்.
நல்ல நாள்: அக். 19, 20, 24, 25, 30, 31, நவ. 1, 2, 3, 8, 9, 10, 11, 12, 15, 16
கவன நாள்: நவ. 4, 5 சந்திராஷ்டமம், கவனம்
அதிர்ஷ்ட எண்: 1, 7 நிறம்: வெள்ளை, செந்துõரம்
வழிபாடு: புதனன்று ஏழைகளுக்கு பாசி பயறு தானம் கொடுங்கள். பைரவர் கோயிலுக்கு சென்று வாருங்கள். வியாழனன்று தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள்.