Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை அகரம் விசுவநாதர் கோவில் ... அக்காசுவாமி கோவிலில் திருப்பணி! அக்காசுவாமி கோவிலில் திருப்பணி!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதரில் மறைந்த சிவாலயம்; மீண்டும் நடக்குமா பூஜை?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 நவ
2014
11:11

பள்ளிப்பட்டு: சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய, பழமையான சிவாலயம், புதரில் மறைந்து கிடக்கிறது.  கோவிலை சீரமைத்து, மீண்டும்  வழிபாட்டிற்கு கொண்டு வர, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழமையான கோவில்: கொற்றலையின் உப நதியான லவா நதிக்கரையில், பள்ளிப்பட்டு அடுத்த, வெளியகரம் கிராமம் அமைந்துள்ளது. அங்கு,  புவனேஸ்வரி உடனுறை பிரதீஸ்வரர், மரகதவள்ளி உடனுறை சோமநாதீஸ்வரர், திருமல்லீஸ்வரர் மற்றும் பெருமாள் என, பழமையான கிராம கோவில்கள் உள்ளன. அதில், பெருமாள் கோவிலில் உள்ள சுவாமியின் பெயரும், திருமல்லீஸ்வரர் கோவிலில் உள்ள அம்மனின் பெயரும்  கிராமவாசிகளுக்கு தெரியவில்லை. மலை மீது உள்ள சோமநாதீஸ்வரர் மற்றும் ஊருக்குள் உள்ள  பிரதீஸ்வரர் கோவில்களில் மட்டும், தினசரி பூ ஜைகள் நடந்து வருகின்றன.

சுவர்கள் சிதிலம்: பெருமாள் கோவிலும், திருமல்லீஸ்வரர் கோவிலும் பாழடைந்து கிடக்கின்றன. திருமல்லீஸ்வரர் கோவில் துாண்களில் அழகிய  சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. கோவிலை சுற்றிலும், கோவில் மேல் தளத்திலும் செடிகள் முளைத்து, மரங்களாக வளர்ந்துள்ளன. இதனால், ÷ காவில் சுவர்கள் இடிந்து வருகின்றன. வெளியகரம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் கூறியதாவது: திருமல்லீஸ்வரர் கோவில், பல்லவர்கள்  காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த, 70 ஆண்டுகளாகவே, இந்த கோவில் பராமரிப்பு இன்றி, பாழடைந்து கிடக்கிறது. கோவிலின்  தென்மேற்கு பகுதியில் உள்ள, முருகன் கோவில் மட்டும், கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன் வரை, வழிபாட்டில் இருந்து வந்தது.

கோரிக்கை: கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், அதில் தினசரி பூஜைகள் நடத்தி வந்தார். அவரது மறைவிற்கு பின், முருகர் கோவிலும், பூஜை  இன்றி பாழடைந்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார். இந்த கோவில்களை சீரமைத்து, மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வர பக்தர்கள் ÷ காரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar