ஈரோடு மாவட்டம், பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் உள்ள ஸ்ரீஅமுதலிங்கம், ஆவுடையாரிலிருந்து எடுக்கவும், பின்பு வைக்கவும்கூடிய அமைப்பில் உள்ளது. இந்த அமுதலிங்கத்தை பெண்கள் தமது இடையில் வைத்துக்கொண்டு, சன்னிதியை மூன்றுமுறை வலம் வந்து வணங்க மகப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.