ரிஷிவந்தியம்: சனிப்பெயர்ச்சியையொட்டி ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உள்ள சனி பகவானுக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது. ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சனிபெயர்ச்சியொட்டி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பூஜை ஏற்பாடுகளை கந்தவிலாஸ் ஜெயக்குமார்,குருக்கள் நாகராஜ், சோமு அய்யர் செய்திருந்தனர். ரிஷிவந்தியம் பகுதியில் திருவரங்கத்தில் உள்ள 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவில், மேலப்பழங்கூர் சிவன் கோவில்களில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தது.எலவனாசூர்கோட்டை எலவனாசூர்கோட்டை கிராம அர்த்தநாதீஸ்வரர் சுவாமி கோவிலில் சனி பெயர்ச்சியையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடுகள் நடந்தது. நேற்று காலை நந்தீஸ்வரர், விநாயகர், முருகர், பிரகன்நாயகி அர்த்தநாதீஸ்வரர் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள், தீபாராதனைகள் வழிபாடு நடந்தது. எ.குறும்பூர் கிராமத்திலுள்ள சனி பகவானுக்கு நேற்று மதியம் 2.45 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.