பதிவு செய்த நாள்
26
டிச
2014
12:12
ஊட்டி: ஊட்டி காந்தல் சபரிமலை மண்டல குழுவினர் சார்பில், மூவுலகரசியம்மன் கோவிலில், 18ம் ஆண்டு திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை, 7:30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. மாலை, 7:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு, 8:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. நேற்று, காலை,9:00 மணிக்கு கலசஆவாஹஜம், மகா கணபதி ஹோமம், பகல், 12:00 மணிக்கு மகா தீபாராதனை, இரவு, 7:00 மணிக்கு சரபேந்திரா நாட்டிய குழுவினரின் பரதநாட்டியம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக, இன்று காலை,7:00 மணிக்கு ஐயப்பனுக்கு சிறப்பு ஹோமம், பகல்,12:00 மணிக்கு உச்சிகால பூஜை, மதியம், 3:30 மணிக்கு ஸ்ரீமணிகண்ட வேத சாஸ்தா திருவீதி புறப்பாடு, மாலை, 6:00 மணிக்கு படி பூஜை, இரவு, தீபாராதனையும் நடக்கிறது. வரும் ஜன.,1ம் தேதி, மூவுலகரசியம்மனுக்கு காலை, 5:00 மணிமுதல் சிறப்பு ஹோமமும் மகா தீபாராதனையும் நடக்கிறது. 15ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு மகரஜோதி சிறப்பு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை சபரிமலை மண்டல பூஜை குழுவினர் செய்துள்ளனர்.