Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசாணியம்மன் கோவிலில் கும்பிட ... சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம்: 5ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகுண்ட ஏகாதசி: நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 டிச
2014
02:12

கடலூர்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு  கடலூர், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நாளை (1ம் தேதி) அதிகாலை 4:00 மணிக்கு  சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. நடுநாட்டு திருப்பதி என பக்தர்களால் போற்றப்படும் கடலூர், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் பகல்  பத்து உற்சவம் கடந்த 22ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதனையொட்டி தினசரி அதிகாலை 4:00 மணிக்கு சுப்ரபாதம், விஸ்வரூப தரிசனம்,  கோ பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜை, திருப்பாவை சாற்றுமுறை, சுவாமிகள் அலங்காரம், பகல் 12:00 மணிக்கு சுவாமிகள் புறப்பாடு,  பாராயணத்தைத் தொடர்ந்து உற்சவர் பகல் பத்து மண்டபத்தில் மண்டகப்படியாகி சேவாதள பூஜையும், மாலை 5:00 மணிக்கு சாற்று முறையும், 6:00  மணிக்கு ஆஸ்தான புறப்பாடும் நடந்தது. இந்த பகல் பத்து உற்சவம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. அதனையொட்டி நாளை (1ம் தேதி) ஆ ங்கில புத்தாண்டு தினத்தன்று சொர்க்க வாசல் திறப்புடன் ராப்பத்து உற்சவம் துவங்குகிறது. இன்று நள்ளிரவு 1:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், சி றப்பு  பூஜை, திருப்பாவை சாற்று முறைகளைத் தொடர்ந்து அதிகாலை 4:00 மணிக்கு சொர்க்க வாசலில் தேவநாத சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு  அருள்பாலிக்கிறார். பாராயணம் சாற்று முறையைத் தொடர்ந்து பக்தர்களின் தரிசனம் நடைபெறுகிறது. புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி ÷ காவிலில் இன்று இரவு 7:00 மணிக்கு பெருமாள், உபயநாச்சியாருக்கு சிறப்பு திருமஞ்சனமும், நாளை (1ம் தேதி) காலை 5:00 மணிக்கு  சொர்க்கவாசல் திறப்பும் நடக்கிறது. இதேப் போன்று மஞ்சக்குப்பம் வில்வநகர் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ  பெருமாள் கோவிலிலும் நாளை சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar