சென்னை: ஆங்கில புத்தாண்டு 2015 கோலாகலமாக துவங்கியது. சென்னை, மும்பை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பொது மக்கள் ஒவ்வொருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். பட்டாசு வெடித்து புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டை முன்னிட்டு கோவில், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. புத்தாண்டை முன்னிட்டு தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.