திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2015 08:01
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியில் தாடாளன்பெருமாள் என்றழைக்கப்படும் லோகநாயகி தாயார் சமேத தி ருவிக்ரமநாராயணபெருமாள் கோயில் உள்ளது.108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோயிலில் பகற் பத்து உற்சவம் முடிவடைந்தது. இதனையொட்டி நேற்று மாலை பெருமாள் மோகினி அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வைகுண்ட ஏகாதசியான இன்று அதிகாலை திருப்பள்ளி எழுச் சி பாடப்பட்டு, பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. 5:30 மணிக்கு ரத்தின அங்கி அலங்காரத் தில் திருவிக்ரம நாராயண பெருமாள் சொர்க்கவாசல் என்று அழைக்கப்படும் பரமபத வாசலில் எழுந்தருளினார்.
அப்போது பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா என கோஷமிட்டு பெருமாளை சேவித்தனர். தொடர்ந்து பெருமாள் வீதியுலாவந்து கோயிலை அடைந்தார்.சீர்காழி எம்.எல்.ஏ.சக்தி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பெருமாள் வலது திருவடி சேவையை கண்டு தரிசித்தனர். மாலை நம்மாழ்வாரின் 100 பாசுரங்கள் பாடப்பட்டு, திருவாய் மொழி சேவை, சாற்று முறை நடைபெறுகிறது. பூஜைகளை பத்ரி பட்டாச்சாரியார் தலைமையிலானோர் நடத்தினார். நிகழ் ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். சீர்காழி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர்.இதுபோல இன்று அதிகாலை மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமளரெங்கநாதர் கோயில் மற் றும் திருநாங்கூர்,அண்ணன்பெருமாள்கோயில் ஆகிய ஊர்களில் உள்ள திவ்யதேச பெருமாள் கோயில் களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.