பதிவு செய்த நாள்
01
ஜன
2015
12:01
புதுச்சேரி : விழுப்புரம் மாவட்டம், வளவனுார், குமாரபுரியில், நடராஜ சுவாமிகளின் 176வது ஆண்டு மகா குருபூஜை, ஆருத்ரா தரிசன மகோற்சவ விழா நடக்கிறது.அதையொட்டி, 4ம் தேதி இரவு 10:00 மணிக்கு, ஆருத்திரா அபிஷேகம் துவங்குகிறது. 5ம் தேதி காலை 5:00 மணிக்கு, சந்தன அபிஷேகம், 6:00 மணிக்கு, ஆருத்ரா தரிசனம், திருவெம்பாவை பாராயணம் நடக்கிறது.காலை 10:00 மணிக்கு, மகா குருபூஜையும், சோட சோபசார தீபாரதனையும், 12:00 மணிக்கு, அமுது படைத்தலும், மாலை 6:00 மணிக்கு, பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடக்கிறது.