Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தியாகராஜர் ஆராதனை விழா: பஞ்சரத்ன ... திருப்பூர் வீரராகவப் பெருமாள் திருக்கல்யாண உற்சவம்! திருப்பூர் வீரராகவப் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை பேட்டை துள்ளல் நிறைவு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2015
10:01

சபரிமலை: அம்பலப்புழா, ஆலங்காடு ஐயப்ப பக்தர்களின் ’பேட்டை துள்ளல்’ நிறைவு பெற்றது. இன்று பந்தளத்தில் இருந்து ஐயப்பன் திருவாபரணம் புறப்படுகிறது. சபரிமலையில் ஜன.,14-ல் ’மகரவிளக்கு பெருவிழா’ நடக்க உள்ளது. இதற்காக கேரள உள்துறை அமைச்சர் சென்னித்தலா தலைமையில் பம்பையில் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதன்படி, ’மகர விளக்கு’ நாளில் 5000 போலீசாரும், கோட்டயம், பத்தனந்திட்டை, இடுக்கி மாவட்டங்களில் 4000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Default Image
Next News

பேட்டை துள்ளல்:கார்த்திகை 1முதல் எருமேலியில் ’பேட்டை துள்ளல்’ நடந்து வருகிறது. இருந்தாலும் ’மகர விளக்கு’ பூஜைக்கு இரண்டு நாட்கள் முன் நடக்கும் அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் ’பேட்டை துள்ளல்’ பிரசித்தி பெற்றது. நேற்று பிற்பகல் 12.45 மணிக்கு வானில் வட்டமிட்ட கருடனை கண்டதும் பேட்டை ஸ்ரீதர்ம சாஸ்தா கோயிலில் இருந்து அம்பலப்புழா பக்தர்கள் யானைகளுடன் ’பேட்டை துள்ளி’ வந்தனர். பெரிய சாஸ்தா கோயிலில் நிறைவு செய்த பின் பெருவழிப்பாதை வழி சபரிமலை சென்றனர். ஆலங்காடு பக்தர்கள் மாலை 3மணிக்கு வானில் பிரகாசித்த நட்சத்திரத்தை கண்டதும் ’பேட்டை துள்ளினர்’. இத்துடன் ’பேட்டை துள்ளல்’ நிறைவு பெற்றது.

திருவாபரணம் புறப்பாடு: மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள்  இன்று பந்தளம் வலியக்கோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து புறப்படுகிறது. அதிகாலை 4:30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு இவை வைக்கப்படும். பிற்பகல் 12 மணிக்கு ’உச்சபூஜை’ க்கு பின் பேடகங்களில் அடைக்கப்பட்டு புறப்படும். இந்த திருவாபரண பவனி ஜன.,14 மாலையில் சன்னிதானம் வரும்.சன்னிதானத்தில் இன்று தீபாராதனைக்குப் பின் ’பிரசாத சுத்தி பூஜை’ நடக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar