Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கோட்டை அழகிரிநாதர் கோவிலில் ... புகையில்லாத போகி: எரிக்க வேண்டாம்! புகையில்லாத போகி: எரிக்க வேண்டாம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புறப்பட்டது திருஆபரண பவனி: நாளை மாலை ’மகரஜோதி’ தரிசனம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2015
10:01

சபரிமலை: ’மகரவிளக்கு’ நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருஆபரணங்கள் நேற்று பந்தளத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டன. சபரிமலையில் நாளை மாலை ’மகர விளக்கு’ பெருவிழாவும், பொன்னம்பலமேட்டில் ’மகரஜோதி’ தரிசனமும் நடக்கிறது. இதற்காக ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ’மகரவிளக்கு’ நாளில் பந்தளம் அரண்மனையில் இருந்து வரும் திருஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.

Default Image
Next News

பந்தள ராஜா: பந்தளம் அரண்மனையில் வளர்ந்த ஐயப்பன் சபரிமலையில் கோயில் கொண்டார். பந்தளம் மன்னர் அவரை காண ஆபரணங்களுடன் சென்றதாக ஐதீகம். இதை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பந்தளம் மன்னர் வம்சத்தினர் ஆபரணங்களுடன் பவனியாக சபரிமலை செல்வர்.

பந்தளத்தில்...: நேற்று பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து பவனி புறப்பட்டது. அதிகாலை 4:30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக திருஆபரணங்கள் வைக்கப்பட்டிருந்தன. பிற்பகல் 12:30 மணிக்கு ’உச்ச பூஜைக்காக’ நடை அடைக்கப்பட்டது. பந்தளம் மன்னர் பிரதிநிதி மகயிரம் திருநாள் கேரளவர்மா ராஜா முன்னிலையில் ஆபரணங்கள் மூன்று பேடகங்களில் அடைக்கப்பட்டன. பின் ’உச்ச பூஜை’ நடந்தது. பந்தளம் வலிய தம்புரான் ரேவதிநாள் ராமவர்மா ராஜா, உடைவாளை மன்னர் பிரதிநிதியிடம் கொடுத்தார். வானத்தில் கருடன் வட்டமிட, ஆபரண பவனி புறப்பட்டது. முக்கிய ஆபரண பெட்டியை குருசாமி கங்காதரன், பூஜை பாத்திரங்கள் பெட்டியை சிவன்பிள்ளை, கொடி பெட்டியை பிரதாப சந்திரனும் சுமந்து வந்தனர். மொத்தம் 23 பேர் கொண்ட குழுவினர் இந்த பெட்டிகளை சுமந்து செல்வர். நேற்று ஐரூர் புதியக்காவு தேவி கோயிலில் தங்கிய குழுவினர், இன்று லாகா சத்திரத்தில் தங்குவர். நாளை மாலை 5:30 மணிக்கு சரங்குத்தி, 6:15 மணிக்கு சன்னிதானம் வந்து சேருவர்.

சன்னிதானத்தில்...: சன்னிதானத்தில் நேற்று மாலை ’பிராசாத சுத்தி பூஜைகள்’ நடந்தன. ”இன்று மதியம் ’பிம்பசுத்தி பூஜைகள்’ நடக்கும். இதற்கு பின் ஐயப்பனுக்கு கலசாபிஷேகம் நடக்கும்,” என தந்திரி கண்டரரு ராஜீவரரு கூறினார். இன்று மாலை 6 மணிக்கு பின் பம்பையில், ’பம்பை விளக்கு’ நிகழ்ச்சி நடக்கிறது. மூங்கில் கம்பு களில்கோபுரங்கள் வடிவமைத்து அதில் விளக்குகள் ஏற்றி, அதை பம்பை ஆற்றில் மிதக்க விடுவர். நாளை பிற்பகல் 1:30 மணிக்கு ’உச்ச பூஜை’ முடிந்து நடை அடைக்கப்பட்டு, மாலை ? மணிக்கு மீண்டும் திறக்கும். மாலை 6:30 மணிக்கு திருஆபரணம் அணிவித்து ’மகரவிளக்கு’ தீபாராதனை நடக்கும். பின், பக்தர்கள் படியேற அனுமதிக்கப்படுவர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar