Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தங்க ரிஷப வாகனத்தில் ராமநாதசுவாமி ... கத்தி போட்டு ஆட்டம்: கோவில் விழாவில் வினோதம் கத்தி போட்டு ஆட்டம்: கோவில் விழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யானை நலவாழ்வு முகாமில் பொங்கல் விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஜன
2015
11:01

மேட்டுப்பாளையம்: யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அனைத்து யானைகளும் விநாயகருக்கு பூஜை செய்தன. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே, பவானி ஆற்றின் கரையோரம், யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெறுகிறது. இங்கு தமிழகம், புதுச்சேரியில் உள்ள கோவில்கள், மடங்களுக்குச் சொந்தமான 30 யானைகள் உள்ளன. இவைகளுக்கு தினமும் காலை, மாலையில் நடைபயிற்சியும், பசும்புல் தீவனம் மற்றும் சத்தான உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. முகாமில், பொங்கல் விழாவை முன்னிட்டு, நேற்று காலை 8:00 மணிக்கு அனைத்து யானைகளையும் குளிக்க வைத்து அலங்காரம் செய்து, வரிசையாக நிறுத்தப்பட்டன. பின்,கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. பொங்கல் பொங்கும் போது, யானைகள் தனித்தனியாக மணியடித்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்தன. பொங்கல், கரும்பு, அவல் ஆகிய உணவுப் பொருட்கள் யானைகளுக்கு வழங்கப்பட்டன. அதன் பின், பாகன்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி, பரிசுகளும், புத்தாடைகளும் வழங்கப்பட்டன. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் இளம்பரிதி, உதவி கமிஷனர்கள் ஜீவானந்தம், கருணாநிதி, முகாம் அதிகாரி நந்தகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; ஆடிப்பெருக்கு யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், ஆடிப்பெருக்கையொட்டி ஏராளமான மக்கள் குவிந்து ... மேலும்
 
temple news
இயற்கையை வழிபடுவது நமது தலையாய கடமை. ஆறுகளையும் தெய்வமாகப் பாவித்து வழிபடும் முறையை நம் முன்னோர்கள் ... மேலும்
 
temple news
ஆண்டு தோறும், ஆடி 18ம் தேதி, நீர்நிலைகளில் மங்கலப் பொருட்களை விட்டு, குடும்பத்துடன் விவசாயிகள் ... மேலும்
 
temple news
கோவை ; டி பெருக்கை  முன்னிட்டு கோவை ஆர். எஸ். புரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஸ்ரீ வித்யா ஹோமம், மஹன்யாச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar