புதுச்சேரி முத்துமாரியம்மன் கோவிலில் தேர் உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04பிப் 2015 02:02
புதுச்சேரி முத்துமாரியம்மன் கோவில் விழாவில், தேர் உற்சவம் நேற்று நடந்தது. புதுச்சேரி முத்துமாரியம்மன் கோவில் வீதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பெருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையடுத்து, தினமும் காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் ரதோற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி கோதண்டபாணி மற்றும் பொதுமக்கள் செய்தனர்.