பதிவு செய்த நாள்
09
பிப்
2015
11:02
சேத்தியாத்தோப்பு அடுத்த கூடலையாத்தூரில் உள்ள நர்த்தன வல்லபேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சேத்தியாத்தோப்பு அடுத்த கூடலையாத்தூரில் ஞானசக்தி பராசக்தி உடனுறை நர்த்தன வல்லபேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பாடல் பெற்ற, அகத்தியர் வழிபட்ட இக்கோவில் 35 ஆண்டுகளுக்குப் பின் புதுப்பிக்கப்பட்டதையொட்டி நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
இதற்கான பூஜை கடந்த 5ம் தேதிதுவங்கியது. 6ம் தேதி மூர்த்தி ஹோமம், ருத்திரஜெபம், அக்னிமணி தீர்த்த சங்கிரஹணம், கும்பஅலங்காரம், யாகசாலை பிரவேசம், விஷேOஉ திரவியாகுதிகள், மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் ஆச்சார்யவிஷேச சந்தி, அனுஷ்டானம், விஷேசஷன் வைதி ஹோமம், கஜபூஜை, மகா பூர்ணாகுதி பூஜையும், யந்திர ஸ்தாபனம் கோபுர கலசஸ்தாபனம், திரவிய ஹோம பூஜைகள் நடந்தது.
நேற்று காலை விநாயகர் வழிபாடு, உடன் யாக மண்டபார்ச்சனை, பிம்ப சுத்தி, தத்துவார்ச்சனை, நாடி சந்தானம் ஸ்பர்சாகுதி பூஜைகளை தொடர்ந்து கடம் புறப்பாடாகி ராஜ கோபுரம் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் மகாகும்பாபிஷேகமும் நடந்தது.உடன் மூலவர் கும்பாபிஷேகமும் மாலையில் மகா அபிஷேகமும், இரவு திருக்கல்யாணமும், பஞ்சமூர்த்தி வீதியுலாவும் நடந்தது. கும்பாபி ஷேகத்தை யொட்டிஅரசு போக்குவரத்து கழகம் சார்பில்சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. டி.எஸ்.பி.,குத்தாலிங்கம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.