பதிவு செய்த நாள்
09
பிப்
2015
12:02
புதுச்சத்திரம்: காயல்பட்டு எல்லை மாரியம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம் வெகுவிமர்
சையாக நடந்தது.புதுச்சத்திரம் அடுத்த காயல்பட்டு எல்லைமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம் தீபாராதனை நடந்தது.
மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கலாகர்ஷணம், முதற்கால யாகபூஜை, இரவு 9.00 மணிக்கு மகாபூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. நேற்று காலை 7.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, தத்துவார்ச்சனை, நாடிசந்தானம், யாத்ரா தானம், மகா பூர்ணாஹூதியை தொடர்ந்து 10:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 10:15 மணிக்கு விமானத்திற்கும், 10:30 மணிக்கு எல்லை மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும்கும்பாபிஷேகம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் கந்தசாமி, ஒன்றியகவுன்சிலர் சித்ரா ராஜி, ஊராட்சி தலைவர்கள் தாமரைச்செல்வி சிவா, செங்குட்டுவன், ஆனந்த், பெருமாள், ஏகாம்பரம்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.