பதிவு செய்த நாள்
10
பிப்
2015
12:02
மாம்பலம்: மேற்கு மாம்பலம் கோதண்ட ராமர் கோவிலில், நேற்று பாலாலய பிரதிஷ்டை நடந்தது.
மேற்கு மாம்பலம், கே.ஆர் தெருவில் உள்ள, கோதண்ட ராமர் கோவிலில், சம்ப்ரோட்சணம் நடைபெற்று ௧௬ ஆண்டுகள் ஆகிறது. இதனால், கோவிலில், சம்ப்ரோட்சணம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டது. அதன்படி, நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு, திருப்பணிகள் துவங்குவதற்கான, பாலாலய பிரதிஷ்டை, பூர்வாங்க பூஜைகள் துவங்கின. இதையடுத்து, நேற்று காலை 6:30 மணிக்கு, விஷ்வரூபம், கும்ப திருவாராதனம், ஹோமம், மகாபூர்ணாஹுதி, கும்ப பெருமாள் புறப்பாடு நடைபெற்றது.
தொடர்ந்து, காலை, 9:00 மணி முதல், 10:30 மணிக்குள் பாலாலய பிரதிஷ்டை, சாற்றுமறை, தீர்த்த பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, கோதண்ட ராமர், அரங்கநாதன், யோகநரசிம்மன், ரங்கநாயகி தாயார், ஆண்டாள், அனுமான், சன்னிதிகள், விமானங்களுக்கு திருப்பணி துவங்குவதற்கான பூஜைகள் நடந்தன. திருப்பணிகள் ஆறு மாதங்களில் நிறைவடைந்து, சம்ப்ரோட்சணம் நடைபெற உள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்தது.