Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தியாகராஜ ஆராதனை விழா நிறைவு! ராகவன்பேட்டையில் மயான கொள்ளை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூச்சியூரில் சிவராத்திரி விழா: பலத்த போலீஸ் பாதுகாப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2015
12:02

பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே, பூச்சியூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே பூச்சியூரில் மகாலட்சுமி, வேட்டைக்காரசாமி, வீரபத்திரசாமி கோவில்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். சிவராத்திரியையொட்டி குருடிமலையில் இருந்து தீர்த்தகலசம் எடுத்து வருதல், அபிசேஷ ஆராதணை நிகழ்ச்சிகள் நடக்கும்.நேற்று காலை கோவில் அருகே உள்ள மைதானத்தில் மகாலட்சுமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை, 5:00 மணிக்கு கோவில் பூசாரி தலையில், தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சியுடன், விழா துவங்கியது. தொடர்ந்து, மகாலட்சுமி பரிவாரங்களுடன் மைதானத்தில் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தார்.

தொடர்ந்து, வேட்டைக்காரசாமி பரிவார மூர்த்திகளுடன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தார். இதில், கோவில் பூசாரி ஆணிக்கால் செருப்பு அணிந்து, தரையின் மீதுள்ள விரிப்பு மீது நடந்து வந்தார். நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல, வீரபத்திரசாமி, தனது பரிவார மூர்த்திகளுடன் ஊர்வலமாக வந்தார். விழாவையொட்டி, சுவாமி வரும் பாதையில் ஆடுகள் பலியிடும் நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை, அந்தந்த கோவில் கமிட்டினர் செய்து இருந்தனர்.

போலீசார் கண்காணிப்பு : பூச்சியூரில் உள்ள வேட்டைக்காரசாமி கோவில் ஊர்வலத்தின் போது, கோவில் பூசாரி ஆணிக்கால் செருப்புடன் கோவில் அருகே உள்ள கான்கிரீட் சாலை மீது நடந்து வருவார். அப்போது, பூசாரி வரும் வழியில், பெண்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற தரையில் படுத்துக்கொள்வர். அவர்கள் மீது பூசாரி ஆணிக்கால் செருப்புடன் நடந்தால் பெண்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.ஆனால், இச்சடங்குக்கு பல்வேறு பெண்கள் நல உரிமைச் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன; இச்சடங்குக்கு தடை விதிக்க வேண்டும் என குரல் கொடுத்தன. இதை தொடர்ந்து, நேற்று முன்தினம், பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கோவில் நிர்வாகிகளிடம் இச்சடங்குகளை நடத்த மாட்டோம் என எழுதி வாங்கி கொண்டனர். போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar