திருமலையில் நடைபெறும் விமரிசையான விழாவில் ஒன்றான தெப்ப திருவிழா மார்ச் 1ந்தேதி துவங்கி 5 ந்தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. முதல் நாள் விழாவில் ராமர்–சீதையுடன் தெப்பத்தில் வலம்வருவார். இரண்டாம் நாள் விழாவில் கிருஷ்ணர்–ருக்மணியுடன் வலம் வருவார். மூன்று,நான்கு,ஐந்தாம் நாள் விழாவில் திருமலை தெய்வமும் உற்சவருமான மலையப்பசுவாமி தேவியருடன் தெப்பத்தில் வலம்வருவார். இதில் ஐந்தாம் நாளான்று பவுர்ணமி முழுநிலவு என்பதால் அந்த நிலவின் ஔியில் தெப்பத்தையும் தெப்பத்தில் இருக்கும் இறைவனையும் தரிசிப்பது என்பது விசேஷமானதாகும். விழாவினை முன்னிட்டு புஷ்கரணி எனப்படும் தெப்பக்குளம் சுத்தம் செய்யப்பட்டு தெப்பநீரும் சுத்திகரிக்கப்படுகிறது.தெப்பம் பிரமாதமாக தயராகி வருகிறது.