Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவப்பூர் மாரியம்மன் கோவிலில் ... திண்டுக்கல் நாளை கும்பாபிஷேகம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்துப்பேட்டையில் சந்தனக்கூடு ஊர்வலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2015
12:03

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள சேக்தாவூத் ஆண்டவர் தர்ஹா உலகப் புகழ்பெற்றது. இந்த தர்ஹாவுக்கு, இந்தியாவின், பல்வேறு பகுதிகளில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலும் பக்தர்கள் உண்டு என்பதால், தினந்தோறும் பக்தர்கள் கூட்டம் காணப்படும். இந்த ஆண்டின், 713வது பெரிய கந்தூரி விழா சென்ற மாதம், 20ம் தேதி அன்று துவங்கியது. ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன் தினம் இரவு, 10.30 மணிக்கு, தர்ஹா முதன்மை அறங்காவலர் இல்லத்தில் வைக்கப்பட்ட சந்தனம் நிரப்பிய குடங்களை தர்ஹாவிற்கு எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி, சிறப்பு பிராத்தனையுடன் நடைபெற்றது.

நள்ளிரவு ஒரு மணிக்கு, சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நேற்று அதிகாலை புனித சந்தன கூடு ஊர்வலம் நடைபெற்றது. நள்ளிரவு இரவு, 2.30 மணிக்கு, தர்ஹா முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாகிப் தலைமையில் தமிம்அன்சாரி உட்பட டிரஸ்டிகள் புனித சந்தன குடம் தலையில் சுமந்து வந்து, கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டில் வைத்ததும் சந்தனக்கூடு ஊர்வலம் துவங்கியது. சந்தனக்கூடு ஊர்வலம் ஆற்றங்கரை பாவா தர்ஹா, அம்மா தர்ஹா பகுதிக்கு சென்று மீண்டும் தர்ஹாவை, மூன்று முறை சுற்றி வந்தடைந்தது. அப்போது, பக்தர்கள், பூக்களை சந்தனக்கூடு மீது வீசி பிரார்த்தனை செய்தனர். திருவாரூர் மாவட்ட எஸ்.பி., ஜெயசந்திரன், ஏ.டி.எஸ்., அனார்கலி பேகம் ஆகியோர் மேற்பார்வையில், முத்துப்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.திருவாரூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில், திருநாளைப்போவார் என்கிற ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரமமோற்சவத்தில் நடக்கும் தெப்பல் திருவிழாவை ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் தை கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: ஊராங்கனி கிராமத்தில் உள்ள வள்ளி தெய்வாணை சமேத சுப்ரமணியர், மகா மாரியம்மன் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar