பதிவு செய்த நாள்
16
மார்
2015
12:03
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியில் பிறந்து, வாளர்ந்து உலகெங்கும் தமிழிசையை பறைசாற்றிய தமிழிசை மூவர்கள் முத்துத்தாண்டவர், அருணாச்சல கவிராயர், மாரிமுத்தாப் பிள்ளை ஆகியோரின் நினைவைப் போற்றும் வகையில் கடந்த பலஆண்டுகளாக சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் கோயிலில் தமிழிசை மூவர் பே ரவையினர், பொது மக்கள் இணைந்து முத்துத்தாண்டவரின் முக்கிய நாளான ஆணி மாதம் மூல நட்சத் திர நாளில் தொடங்கி 3நாட்களுக்கு தமிழிசை மூவர் விழாவை விமர்சையாக நடத்தினர்.இதில் தமிழக ம் முழுவதிலும் இருந்து வந்து கலந்து கொள்ளும் தமிழிசை கலைஞர்கள் தமிழிசை மூவர்கள் இயற்றி ய கீர்த்தனைகளை பாடியும், நாட்டிய நாடகம் வாயிலாகவும் ஆராதனை செய்தனர். கடந்த சில ஆண்டு களாக இவ்விழாவை தமிழக அரசு ஏற்று நடத்திவருகிறது. இதையடுத்து மூன்று நாட்கள் நடைபெற்ற விழா நிதி பற்றாக் குறையை காரணம் காட்டி 2 நாட்களாக குறைக்கப்பட்டதுடன், விழா நடைபெறும் நாளும் மாற்றப்பட்டது.
இவ்விழாவை மீண்டும் ஆணி மூல நட்சத்திர நல்ல நாளில் நடத்த வேண்டும் என தமிழிசை பிரியர்களும்,பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் கலை பண்பாட்டு துறை, தஞ்சாவூர் ம ண்டல கலை பண்பாட்டு மையம், தென்னகப் பண்பாட்டு மையம், நாகப்பட்டினம் மாவட்ட கலை ம ன்றம் ஆகியவற்றின் சார்பில் 2 நாட்கள் தமிழிசை மூவர் விழா நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் நட ந்த தொடக்க விழாவில் கலை பண்பாட்டுத்துறை துணை இயக்குனர் குணசேகரன் வரவேற்றார். கலெ க்டர் பழனிச்சாமி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்தார்.மக்கள் தொடர்பு துறை அலுவலர் அண்ணாதுரை, தாசில்தார் ராமச்சந்திரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். தொ டர்ந்து சென்னை சங்கீதா சிவக்குமாரின் பாட்டு,ரேவதி முத்துசாமியின் நாட் டிய நாடகம்,சீர்காழி முரு கேசன், ரவிசங்கர், வெங்கடேசன், கொங்கம்பட்டு முருகையன், பாலசுப்பிரமணியனின் தனி தவில் இ சை நிகழ்ச்சி நடைபெற்றன. நேற்று தமிழிசை மூவர் இசை வழிபாடு, இசை பள்ளி மாணவர்களின் இ சை நிகழ்ச்சி, பாட்டு, நாதஸ்வரம், தனித்தவில் மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. அரசு சார்பில் நடைபெடும் விழாவில் அமைச்சர் ஜெயபால்,எம்.பி. பாரதிமோகன், சீர்காழி எம்.எல்.ஏ. சக்தி உள்ளிட்டோர் கலந்துகொள்ளாதது பொதுமக்களிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியது.முறையான அ றிவிப்பு இல்லாததால் குறைந்த எண்ணிக்கையில் இசை பிரியர்கள் நிகழ்ச்சியை கான வந்திருந்தனர்.