Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தட்டாஞ்சாவடி அங்காளம்மன் கோவிலில் ... திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலுக்கு  புதிதாக 3 தேர்கள்! திருநள்ளார் சனிஸ்வர பகவான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கழுக்குன்றத்தில் நாத உபாசனை விழா!
எழுத்தின் அளவு:
திருக்கழுக்குன்றத்தில் நாத உபாசனை விழா!

பதிவு செய்த நாள்

21 மார்
2015
11:03

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் மலை அடிவாரத்தில், நாத உபாசனை விழா, நேற்று முன்தினம் நடைபெற்றது. திருக்கழுக்குன்றத்தில் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களால் உருவான வேத மலையின் மேல், திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

இசை நிகழ்ச்சி: வேதங்களால் உருவான மலையின்மேல் சுவாமி அமர்ந்துள்ளதால், ஆண்டுதோறும் பங்குனி மாத சிவராத்திரியை முன்னிட்டு, மலையடிவாரத்தில் அமைந்துள்ள கோவிலில், தவில் மற்றும் நாதஸ்வர வித்வான்கள் இசை நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, வேதகிரீஸ்வரர் கோவிலின் ஓதுவார் சொக்கலிங்கம் தேவாரப் பாடல்களை பாட, இசை நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. வேதகிரீஸ்வரர் திரிபுரசுந்தரி அம்பாள் தம்பதி சமேதரராய் அலங்கரித்து, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், சுவாமியின் முன், தவில் மற்றும் நாதஸ்வர இசை நிகழ்ச்சி, 10 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது. தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் ஒவ்வொரு குழுவாக, ஒரு மணி நேரத்திற்கு ஒரு குழுவினர் என, இசை நிகழ்ச்சியை நடத்தினர். நேற்று முன்தினம், இரவு 7:00 மணிக்கு துவங்கிய இசை நிகழ்ச்சி, நேற்று அதிகாலை 5:00 மணி வரை நடைபெற்றது.

ரசிப்பு: நிகழ்ச்சியில் சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த ஏராளமான கலைஞர்கள் கலந்து கொண்டனர். இசை நிகழ்ச்சியைக் காண இசைப் பிரியர்கள், பக்தர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். இசைக் கலைஞர்கள் ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு வாசித்த நாதஸ்வர, தவில் இசை ஒலியை, பக்தர்கள் மெய்சிலிர்க்க கேட்டு ரசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உஜ்ஜைன்; மத்தியப் பிரதேசம், உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோயிலில் ஷரத் பூர்ணிமாவை முன்னிட்டு கீர் வைத்து, ... மேலும்
 
temple news
கேரளா, பாலக்காடு, கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில் தேர்த் திருவிழா நவ., 07 ... மேலும்
 
temple news
சுசீந்திரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவிற்கு சென்றிருந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar