Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ராம ... பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா சந்தனக்காப்பு! பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணக்குள விநாயகர் கும்பாபிஷேகம்: ரூ. 6 கோடி செலவில் திருப்பணி!
எழுத்தின் அளவு:
மணக்குள விநாயகர் கும்பாபிஷேகம்: ரூ. 6 கோடி செலவில் திருப்பணி!

பதிவு செய்த நாள்

31 மார்
2015
11:03

புதுச்சேரி: புதுச்சேரியின் பிரசித்திப் பெற்ற மணக்குள விநாயகர் கோவில் கும்பாபிஷேக திருப்பணி ரூ. 6 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக, கோவில் விசாலமார்க்கப்பட்டு, வலதுபுறம் முழுமையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டாலும், எந்தவித நெரிசலும் இல்லாமல், சுவாமி தரிசனம் செய்ய முடியும். அழகிய முறையில் புதிதாக உற்சவர் மண்டபம், சுவாமிக்கு திருமண வைபவ மண்டபம், கண்ணாடி பள்ளியறை அமைக்கப்பட்டுள்ளது. கர்ப்பக்கிரக விமான ஸ்தூபி கலசம், சொர்ண மயமான ஆனந்த விமான நிலையமாகவும், பாலவிநாயகர், பாலசுப்ரமணியர். ரஜத பந்தன விமானம், ஸ்தூபி கலசம் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மணக்குள விநாயகரை சிரமமின்றி வழிபட வசதியாக, பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் திருப்பணி வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், வரும் ஏப்ரல் 3ம் தேதியன்று, காலை 8.45 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. முதல்வர் ரங்கசாமி, சபா நாயகர் சபாபதி, தொகுதி எம்.எல்.ஏ.,வும், திருப்பணிக்குழு கவுரவத் தலைவருமான லட்சுமி நாராயணன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். கும்பாபிஷேக பூஜைகள் துவங்கிய தினத்தில் இருந்து, தினமும் மாலையில் இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (31ம் தேதி) தவில் வித்வான் பொன் சண்முகம் மற்றும் குழுவினரின் மேள வாத்திய கச்சேரி, ஏப்ரல் 1ம் தேதியன்று, ராஜேஷ் வைத்தியாவின் வீணை கச்சேரி, 2ம் தேதி, ஓ.எஸ். அருணின் வாய்ப்பாட்டு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவல் குழு தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் உறுப்பினர்கள், கோயில் நிர்வாக அதிகாரி கருணாகரன், திருப்பணிக்குழு செயலாளர் குணசேகரன், பொருளாளர் ஆனந்தரங்க ரவிச்சந்திரன், உறுப்பினர் பரசுராமன் உள்ளிட்டோர் செய்துவருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar