செஞ்சி: செஞ்சி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. செஞ்சி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. செஞ்சி காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவி லில் காலையில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மாலை 3 மணிக்கு நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் நடந்தது. ஏராளமான பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். பூஜைகளை கிரிசங்கர் குருக்கள் செய்தார். பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். அருணாச்சலேஸ்வரர், அபிதகுஜாம்பாள் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்தனர். மாலை 6 மணிக்கு சாமி கோவில் உலாநடந்தது. இதில் திருப்பணிக்குழு தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்குணம் முக்குன்ற நாத உடையார் கோவிலில் முக்குன்ற நாதர் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மகா தீபாராதனையும், சாமி கோவில் உலாவும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்தனர். உபயதாரர் ராஜேந்திரன், நிர்வாகிகள் பச்சைவண்ணன், செல்லக்குட்டி, பழனி, சண்முகம், நாராயணசாமி மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.